திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் அதிகாலை முதல் கோயிலில் கூட்டம் அலைமோதியது. அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. தை மாதம் தைப்பூசத் திருவிழா, மாசியில் மாசிப் பெருந்திருவிழா, பங்குனி திருவிழா, சித்திரை மாத பிறப்பு, வைகாசி விசாகத் திருவிழா என ஆண்டு தோறும் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் எப்போதும் கோயிலில் காணப்படும். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வார நாட்களை விட கூட்டம் அதிகரிக்கும்.