சென்னை:சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ராஜசேகர், காவலர் அசோக் குமார், சன்னி லாய்டு ஆகியோர் திருவல்லிக்கேணி லாட்ஜ் ஒன்றில் சில நாட்களுக்கு முன்பாக சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறையில் பதுக்கி வைத்திருந்த லேப்டாப்புகளை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் கைது செய்வதில் பணம் விளையாடியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் வெளியே தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி, 3 பேரும் அதிரடியாக அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல், பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் பணியாற்றிய காவலர் முத்துகிருஷ்ணன், வேப்பேரி காவல்நிலையத்தில் பணியாற்றிய காவலர் புஷ்பராஜ் ஆகியோர் வழக்கு தொடர்பாக லஞ்சம் பெற்றதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.