புதுடெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காரின் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் திடீரென வந்து படுத்த நபர், ‘‘ஆதார் கார்டில் என் பெயரை மாற்றித்தாருங்கள். இல்லாவிட்டால் என் மீது ஏற்றிவிட்டு செல்லுங்கள்,’’ என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் குளிர்க்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதனால், நாடாளுமன்றத்துக்கு செல்லும் சாலை, பரபரப்பாக இருக்கும். காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். இந்நிலையில், நேற்று மதியம் 1.25 மணி அளவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்றத்தில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னும், பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து வந்தன. அப்போது, திடீரென ஒரு நபர் சாலையில் வந்து படுத்துக் கொண்டார். அதைப் பார்த்த காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று அவரை அப்புறப்படுத்தினர்.