பெரம்பூர்: திருவிக நகர், கிருஷ்ணா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் உபயத்துல்லா (37). பாரிமுனையில் செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 12 வருடங்களுக்கு முன்பு நஸ்ரின் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு அதிகமாகி அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் காலை கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த நஸ்ரின் அடுப்பில் சூடாக கொதித்து கொண்டிருந்த எண்ணெயை எடுத்து உபயத்துல்லா மீது ஊற்றினார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அவரது உடல் முழுவதும் வெந்த நிலையில் துடிதுடித்து கொண்டிருந்தார். நஸ்ரின் உடனடியாக அங்கிருந்து தப்பி தலைமறைவானார்.