புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் பொது மேடையில், பிரியங்கா காந்தி என்று கோஷமிடுவதற்கு பதிலாக, பிரியங்கா சோப்ரா வாழ்க என்று கோஷமிட்டது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. டெல்லியில் நடைபெற்ற பேரணி ஒன்றில் டெல்லியின் காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுரேந்தர், ‘பிரியங்கா காந்தி வாழ்க’ என கோஷமிடுவதற்கு பதிலாக, ‘பிரியங்கா சோப்ரா வாழ்க’ என்று கோஷமிட்டார். அதை பின்பற்றி தொண்டர்களும் அப்படியே கோஷமிட்டனர். இதனால், பொதுகூட்டத்தில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.