மேலூர்: அதிவேகமாக வாகனங்கள் செல்லும் நான்குவழிச்சாலையில் திடீர் திடீரென குறுக்கிடும் கால்நடைகளால் அடிக்கடி விபத்து நடக்கிறது. அதை ஹைவேபட்ரல் போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரையில் இருந்து திருச்சி சென்னை வரை அதிவேகமாக செல்ல வசதியாக நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. எதிர் திசையில் வாகனங்கள் வராது என்பதால் இச்சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்துமே 100 கி.மீ. வேகத்திற்கு குறையாமல் செல்கின்றன. சாலை அமைத்த காலத்தில் இதை அறியாமல் ஆங்காங்கே உள்ள கிராம மக்கள் இச்சாலைகளை அசால்டாக கடப்பது என்று இருந்தனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கில் உயிர்பலிகள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்தே தற்போது கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, சாலைகளை அதிக கவனத்துடன் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலூர் நான்குவழிச்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து: ஹைவே பேட்ரோல் போலீசார் கவனிப்பார்களா?
- நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருடன் விபத்து விபத்துக்கள்
- அடிக்கடி விபத்து விபத்துக்கள்