வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் கடந்த 28ம் தேதி வீட்டின் பின்புறம் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 4 பேர், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து காரில் ஏற்றினர். அவர் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தம்பி, அக்காவை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் செல்வதை பார்த்து சத்தம் போட்டபடி பின்னால் ஓடினார். ஆனால், அதற்குள் கார் அங்கிருந்து சென்றுவிட்டது. இதுகுறித்து, இளம்பெண்ணின் தந்தை பொன்னூர் போலீசில் புகார் செய்தார்.