ராஜபாளையம்: ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப் பள்ளியில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடந்தது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கலப்படமில்லா நாட்டு இன நாய்கள் வளர்க்கும் ஆர்வத்தை பொதுமக்களிடையே அதிகரிக்கும் வகையில் கோவையை சேர்ந்த நேச்சர் டாக் பிரீட் ஸ்பெசாலிட்டி கிளப் சார்பில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. தமிழகம், கேரள மாநிலத்திலிருந்து கோம்பை, கன்னி, சிப்பிபாறை, ராஜபாளையம், கேரவன்ஹவுண்ட் உள்ளிட்ட 8 வகையான 178 நாட்டு இன நாய்கள் பங்கேற்றன. நாயின் வயது, உடல் அமைப்பு, உயரம், எடை, வேகம் உள்ளிட்டவைகளை டெல்லியிருந்து வந்திருந்த நடுவர் ஷரத் ஷர்மா பரிசோதனை செய்தார்.