டெல்லி: பிரியங்கா காந்தி வாழ்க எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக தவறுதலாக பிரியங்கா சோப்ரா வாழ்க என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் முழக்கமிட்டது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியொன்றில், அக்கட்சியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் முழக்கமிட்டார். அப்போது சோனியா காந்தி ஜிந்தாபாத்...காங்கிரஸ் கட்சி ஜிந்தாபாத்...ராகுல் காந்தி ஜிந்தாபாத்... என வரிசையாக முழங்கியவர், அடுத்ததாக பிரியங்கா காந்தி ஜிந்தாபாத் என குறிப்பிடுவதற்கு பதிலாக பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத் என தவறுதலாக குறிப்பிட்டார்.