கலிபோர்னியா: கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே உள்ள குவேம்புநகரை சேர்ந்தவர் அபிஷேக் சுதேஷ்பட். இவர் மைசூரில் என்ஜினீயரிங் படித்து முடித்த இவர் மேல் படிப்புக்காக கடந்த 1½ வருடத்துக்கு முன்பு அமெரிக்கா சென்றார். அங்கு கலிபோர்னியாவின் கான்பெர்னாக்பிகோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். பகுதி நேரமாக அங்குள்ள சாலையோர உணவு விடுதி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் அபிஷேக்கை சுட்டுக்கொலை செய்தார். அபிஷேக் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு என்ஜினீயரிங் படித்த மைசூரை சேர்ந்த ஸ்ரீவத்கா என்பவர் தற்போது அமெரிக்காவில் பணியாற்றுகிறார். அவரும் அபிஷேக்குடன் உணவு விடுதியில் வேலை பார்க்கிறார்.