திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்தி சிலைகள் தேய்மானம் அடைந்துள்ளதால் ஆர்ஜித சேவைகளை நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம் என்று தினந்தோறும் ஆர்ஜித சேவைகளும் வாராந்திர நாட்களில் விசேஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் வருடாந்திர சேவைகள் என பல்வேறு சேவைகள் நடைபெற்று வருகிறது. இந்த சேவைகளின்போது உற்சவ மூர்த்திகளான தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு தண்ணீராலும் பல்வேறு திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனால் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த உற்சவர் சிலைகளில் தற்போது தேய்மானம் ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்தி சிலைகள் தேய்மானம் : ஆர்ஜித சேவைகள் நிறுத்தம்?
- மலையப்ப சுவாமி
- திருப்பதி எசுமலயன் கோயில் சிலைகள்
- திருப்பதி எசுமலயன் கோயில்
- மலையப்ப சுவாமி உட்சவ மூர்த்தி