திருவனந்தபுரம்: பழுதுபார்க்கக் கொடுத்தத் தனது சைக்கிளை கடைக்காரரிடமிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டி கேரளாவைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் தனது நோட்டு புத்தகத்தின் தாளிலேயே காவல்துறைக்கு அளித்த புகார் மனு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த மாணவன் தன கைப்பட எளிதிய புகார் கடிதமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் விளையாட்டூரைச் சேர்ந்தவர் அபின் என்ற 10 வயது சிறுவன் மேப்பையூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளான். அதில், நான் கடந்த செப்டம்பர் 5-ம் தேதியில் எனது மற்றும் என் சகோதரரின் சைக்கிள்களை பழுது பார்க்க அருகிலுள்ள சைக்கிள் கடையில் கொடுத்தேன். அதை பழுது பார்ப்பதற்காக ரூ.200 பணமும் கொடுத்தேன். ஆனால், இரண்டு மாதங்களாகியும் இன்று வரை அந்த சைக்கிள் கடைக்காரர் எங்களின் சைக்கிள்களை திரும்பத்தரவில்லை. நாங்கள் பலமுறை கேட்டும் முறையான பதிலில்லை. சில நேரங்களில் போன் அழைப்பையும் அவர் ஏற்பதில்லை. எங்கள் சைக்கிளை மீட்டுத்தரவும் என மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது.