மதுரை: கீழடி அகழ்வாராய்ச்சிக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கீழடி அடுத்தகட்ட ஆய்வை தொடங்கும் தருணம் நெருங்கி வருவதாக குறிப்பிட்டார். இதற்காக சென்னையில் மூத்த பேராசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோரை சந்தித்து கீழடி 6ம் கட்ட ஆய்வை உடனடியாக தொடங்க வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, கீழடியில் அடுத்தக்கட்ட அகழ்வாராய்ச்சி தொடர்பாக மாநில தொல்லியல் துறையுடன் இணைந்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு மற்றும் மதுரை பல்கலைக்கழகம் இடையே ஒருமாத காலத்திற்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவித்தார்.