மதுரை: நீட் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் சென்னை மாணவரின் தந்தை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.நீட் தேர்வில் நடந்த ஆள் மாறாட்ட மோசடி தொடர்பாக, சென்னை, கோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் ரிஷிகாந்த் (19), இவரது தந்தை ரவிக்குமார் (61) ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு, தேனி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து இருவரும் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இருவரையும் கைது செய்ய வேண்டாமென நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ராபின்சன் ஆஜராகி, ‘ரவிக்குமாரிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம்’ என்றார்.