தேனி. : தேனியில் நடந்த விழாவில் பங்கேற்ற துணைமுதல்வர் ஓபிஎஸ், வளைகாப்பு விழா திட்டத்தை 1912ல் ஜெயலலிதா துவக்கியதாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. தேனியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.