தென்தாமரைகுளம்: சாமிதோப்பு அருகே சாஸ்தன்கோவில்விளையில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் 3 மாதங்களாகியும் திறக்காமல் உள்ளது. சாஸ்தன்கோவில்விளை, சாமிதோப்பு, கரும்பாட்டூர், செட்டிவிளை, சோட்டப்பணிக்கன்தேரிவிளை, கோட்டையடி, கோட்டையடிபுதூர், ஆண்டிவிளை என்று அனைத்து ஊர்களிலும் அங்கன்வாடி காப்பகங்கள் காணப்பட்டாலும் மிக குறுகிய கட்டடங்கள், குழந்தைகளுக்கான கழிப்பறைகள் என்று போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் சில இடங்களில் காணப்படுகிறது. இதில் சில குழந்தைகள் காப்பகங்களுக்கு தனி கட்டிடம் இல்லாமலும், கழிப்பறை இல்லாமலும், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரமின்றியும் காணப்படுகிறது. சில காப்பகத்தில் போதியகாற்று வசதியின்றி கடுமையான வெப்பம் மற்றும் கடுங்காற்றுக்குள் இருந்து கல்வி பயிலும் சூழ்நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் சாஸ்தான்கோயில்விளையில் சாமிதோப்பு பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ரூ.8.70 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.