காசிமேடு துறைமுகத்தில் வாலிபர் சடலம் மீட்பு

தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகம் வார்ப்பு பகுதியில் நேற்று காலை, சுமார் 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் கரை ஒதுங்கியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், மீன்பிடிக்க சென்றபோது கடலில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு காரணமா என விசாரிக்கின்றனர்.

Related Stories: