சோமனூர்: கோவை சோமனூர் அடுத்த வடுகபாளையம் நீர்தேக்க குட்டையில் காளை மாட்டுடன் இறங்கி டிக்டாக் எடுத்த தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.கோவை சோமனூர் அடுத்த கே.ராயர்பாளையத்தை சேர்ந்த பரமேஸ்வரன்(38), புவனேஸ்வரன் (18), மாதவன்(19), விக்னேஸ்வரன்(22) ஆகியோர் வடுகபாளையத்தில் உள்ள நீர்த்தேக்க குட்டையில் நீச்சலடிக்க சென்றுள்ளனர். ஒரு மாட்டையும் உடன் அழைத்து ெசன்று, மாட்டை நீரில் குளிப்பாட்டியும், மாட்டின் மேல் ஏறிக்கொண்டு நீச்சல் அடித்தும், டிக்டாக் வீடியோ எடுத்தும் அட்டகாசம் செய்துள்ளனர்.