கொள்ளையன் முருகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மதுரை:  திருச்சி லலிதா ஜூவல்லரியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பிரபல கொள்ளையன் முருகன் கைதானார். இவரிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த நகைகளை மதுரையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் விற்றது தெரியவந்தது.  இதனையடுத்து விற்கப்பட்ட நகைகளை பறிமுதல் செய்வதற்காக, பெங்களுர் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன் முருகனை மதுரைக்கு அழைத்து வந்தனர்.

மதுரை போலீசார் உதவியுடன், சம்பந்தப்பட்ட நகைக்கடையில் விசாரணை நடத்தி, நகைகளை மீட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, முருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குணமடைந்த நிலையில் நேற்று முருகன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

Related Stories: