சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்துவரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவர், 5க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். கடந்த 14ம் தேதி அதிகாலை, வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை பசுவபாளையம் கிராமத்தில் புகுந்து சுப்பிரமணிக்கு சொந்தமான பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 5 ஆடுகளில், 3 ஆடுகளை அடித்துக் கொன்றது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். அட்டகாச சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அவர்கள், வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.