காஞ்சிபுரம்: வண்டலூரில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கனகவள்ளி என்பவர் உயிரிழந்தார். திருவேற்காட்டை சேர்ந்த கனகவள்ளி, வண்டலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கினார். வண்டலூர் வெளிவட்ட சாலையில் திரும்பும் போது பின்னால் வந்த லாரி மோதியதில் கனகவள்ளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.