சென்னை : விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வந்த சிறப்பு ரயிலில் சுமார் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்தி வந்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் கஞ்சா கடத்தி வந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.