மதுரை: மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து மனு செய்தால் விசாரிக்கப்படும் என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, அவசர வழக்காக விசாரிக்க மறுத்தது. ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் நேற்று காலை வழக்குகளை விசாரிக்க துவங்கினர். அப்போது வக்கீல் கமுதி நீலமேகம் ஆஜராகி கூறியதாவது: தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் மற்றும் தலைவர் பதவிகளை மறைமுகமாக தேர்வு செய்யும் வகையில் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. தலைவர் பதவிகளை மறைமுகமாக தேர்வு செய்வதன் மூலம் குதிரை பேரம் அரங்கேற வாய்ப்புள்ளது.