சென்னை: ரஜினி சொல்வது சரியல்ல. தமிழகத்தில் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று வைகோ கூறினார். சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேகதாது பிரச்னை, ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவை தலைக்குமேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த பிரச்னையும் சேர்ந்து இருப்பதால் தமிழகமே பாலைவனமாக மாறிவிடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அதற்கு பதில் சொல்ல இந்த அரசு வக்கற்று திமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என்ற தவறான குற்றச்சாட்டை கூறுகின்றனர்.