காங்கயம்: காங்கயத்தில் மளிகைக்கடையின் கூரையை பிரித்து திருடி விட்டு தப்ப முயன்ற திருடனை பிடித்து தர்மஅடி கொடுத்த மளிகைக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள அத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர் காங்கயம் நகரில் பழைய கோட்டை சாலையில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 11ம் தேதி வழக்கம்போல இரவு கடையை பூட்டிவிட்டு பணியாட்கள் அனைவரும் சென்று விட்டனர். அன்று இரவு ஒரு மணியளவில் ஒரு நபர் கடையின் கூரையை பிரித்து உள்ளே இறங்குவதை சி.சி.டி.வி. கேமரா மூலம் வீட்டில் இருந்தபடியே சுேரஷ் பார்த்துள்ளார். உடனடியாக அவர் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து கடையை திறந்து பார்த்தனர். அப்போது கடையின் உள்ளே இருந்த சுமார் ₹15 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பண்டலை தூக்கி கொண்டு பிரிக்கப்பட்ட கூரை வழியே மேலே ஏறி தப்ப முயன்றார். அந்தநேரத்தில் அவர் தவறி கீழே விழுந்தார்.