அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே பள்ளிக்கட்டிடம் சேதமடைந்ததால், கிராம சேவை மையத்தில் பள்ளி இயங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அறந்தாங்கியை அடுத்த மூக்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 1 முதல் 5 வரை பழமையான ஓட்டுக் கட்டிடத்திலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை கான்கிரீட் கட்டிடத்திலும் பள்ளிகள் இயங்கி வந்தன. இந்த 2 பள்ளிக்கட்டிடங்களுமே சேதமடைந்த நிலையில் இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையில் பள்ளிகளின் கூரைகளில் இருந்து பள்ளி அறைக்குள் தண்ணீர் ஒழுகியது.