வாஷிங்டன்: அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டால் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் அருகே உள்ள சாண்டா கிளறிட்டா காலிப் என்னும் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் குறைந்தது இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்திருப்பதாக செரீப் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து படுகாயமடைந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்செல்ஸ் தீயணைப்பு படை பிரிவு தெரிவித்துள்ளது. கருப்பு ஆடை அணிந்த 16 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.