தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பாதாள சாக்கடையில் அடைப்பை சுத்தம் செய்யும் பணியின் போது துப்புரவு தொழிலாளி ஒருவர் சாக்கடையில் தவறி விழுந்து உயிரிழந்தார். கும்பகோணம் மேலேகாவிரியை சேர்ந்த சாதிக் பாஷா உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர் கும்பகோணம் ரயில் நிலையம் எதிரே பாதாள சாக்கடையை கழிவுநீர் வாகனகுழாய் உதவியுடன் அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் கம்ப்ரசர் குழாய் மூலம் அடைப்பை எடுக்க முயன்ற சாதிக் பாஷா குழாயை உள்ளே செலுத்திய போது நிலை தடுமாறி பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்தார். இதனை கண்டு அச்சமடைந்த சக தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடி உள்ளனர். பின்னர் பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.
கும்பகோணத்தில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு
- துப்புரவு தொழிலாளி
- விஷ வாயு தாக்குதல்
- எரிவாயு தாக்குதல்
- கும்பகோணம்
- ஊழியர்கள் சுத்தம்
- கழிவுநீர் சுத்தம்