குமரி அருகே புயலால் கரை ஒதுங்கிய 10 மீனவர்கள் ஒரு மாதத்திற்குப் பின்னர் சொந்த ஊர் திரும்பினர். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமங்களை சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த மாதம் 13ம் தேதி கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் 45 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் இருந்து 5 படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் புயல் எச்சரிக்கை தொடர்பாக மீனவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து கடலில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் கச்சத்தீவு அருகே கல்பேனி தீவில் கடந்த மாதம் 25ம் தேதி கரை ஒதுங்கினர். படகை கடலில் ஆழம் குறைந்த பகுதியில் நிறுத்தியிருந்தனர்.