மதுரை: கொலை வழக்குகளில் தண்டனை மற்றும் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரிக்கிறது. இவர்கள் கடந்த 8ம் தேதி பிறப்பித்த உத்தரவில், பல வழக்குகளில் சாட்சியங்கள் பிறழ் சாட்சிகளாக மாறியதால் பலர் விடுதலையாகின்றனர். எதிர்வரும் காலங்களில் விசாரணையின்போது, சாட்சியங்களை வீடியோ, ஆடியோ பதிவு செய்வது குறித்து காவல்துறை தரப்பில் உரிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர். இந்த வழக்கு நேற்று மதியம் மீண்டும் விசார ணைக்கு வந்தது. தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், உதவி கமிஷனர் லில்லி கிரேஷி ஆகியோர் ஆஜராகினர்.