கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் நேற்று நள்ளிரவுடன் பிரசாரம் முடிவடைந்தது.
இலங்கையில் நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் களத்தில் லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக, முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். அவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழர் கட்சி கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோத்தபய ராஜபக்சேக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. ஆனால், இதற்கு அக்கட்சியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் ஒரு பிரிவினர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். இவ்விருவரை தவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.