கமுதி: கமுதி வெள்ளையாபுரத்தில், பொதுக்கழிப்பிடத்தின் அருகே வரும் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தும் அவலம் உள்ளது. கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி வெள்ளையாபுரம் ஆகும். கமுதி-சாயல்குடி சாலையில் இப்பகுதி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்ட தண்ணீர் குழாய் நீண்ட நாட்களாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சரி செய்ய இங்குள்ள மக்கள் பல முறை கோரிக்கை வைத்தும், எந்த பயனும் இல்லை. எனவே அனைவரும் சாலையோரத்தில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே உள்ள குழாயில் தினமும் வீட்டு பயன்பாட்டிற்காக தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.