சென்னையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ.128 உயர்ந்து 29,072-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து 29,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது.

செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. நவம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் இன்று (நவம்பர் 13) ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) 128 ரூபாய் உயர்ந்து 29,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, நேற்று 3,622-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று கிராமிற்கு ரூ.16 உயர்ந்து ரூ.3.634-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 30காசு உயர்ந்து 47.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில்  கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: