தாகா: வங்கதேசத்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். வங்கதேசத்தில் சில்ஹெட்டில் இருந்து உதயன் எக்ஸ்பிரஸ் ரயில், சிட்டகாங் சென்றுகொண்டிருந்தது. இதேபோன்று தாக்கா நோக்கி துர்னா நிஷிதா ரயில் சென்று கொண்டிருந்தது. பிரமான்பாரியா மாவட்டத்தில் உள்ள மாண்டாபாக் ரயில் நிலையம் அருகே சென்றபோது, அதே தண்டவாளத்தில் எதிரே மற்றொரு ரயில் வந்ததை பார்த்ததும் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால், டிரைவர் சுதாரிப்பதற்குள் இரு ரயில்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.