கொடைக்கானல்: முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக கொடைக்கானல் அதிமுக கூட்டுறவு வங்கித் தலைவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அட்டுவம்பட்டியைச் சேர்ந்தவர் விக்ரம்செந்தில். அதிமுகவைச் சேர்ந்த இவர், அட்டுவம்பட்டி பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவராக உள்ளார். இரு தினங்களுக்கு முன்பு கொடைக்கானலைச் சேர்ந்த லியோ சாம்ராஜ் என்பவர் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். இதற்கு விக்ரம்செந்தில் பதில் பதிவு செய்துள்ளார்.