சாத்தான்குளம்: சாத்தான்குளம் பள்ளி மாணவன் மலேசியாவில் நடக்கும் சர்வதேச கராத்தே போட்டியில் பங்குபெற தகுதி பெற்றும் நிதியில்லாமல் தவித்து வருகிறான். அவருக்கு அரசு உதவி செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தான்குளம் மேரி இமாகுலேட் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆரோன் ஜெபஸ். இவர் இந்தியா அளவில் பல்வேறு கராத்தே போட்டியில் பங்குபெற்று பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளார். தற்போது மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.இந்த போட்டி மலேசியாவில் நவ.23, 24 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.