நாமக்கல்: இந்தாண்டு மின்துறைக்கு நஷ்டம் அதிகமாகியுள்ளது’’ என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மின்சார மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக மின் வாரியத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என ‘தினகரன் நாளிதழ்’ கடந்த6ம்தேதி வெளியிட்ட செய்தி பற்றி அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறியதாவது: தமிழக மின்சாரத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் நஷ்டம் ஏற்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து மின்சாரம் கொள்முதல், நிலக்கரிக்கான கொள்முதல் செய்வது அதிகமாகியுள்ளது. இருப்பினும் மின்சார கொள்முதல் குறைத்து வாங்கியுள்ளோம். போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. ஊழியர்களுக்கான சம்பளம் 1,200 கோடியாக கூடியுள்ளது. காற்றாலையில் 2000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தாண்டு மின்துறைக்கு நஷ்டம் கொஞ்சம் அதிகமாகியுள்ளது.