புதுடெல்லி: ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை சரி செய்ய, நாடு முழுவதும் நிலுவையில் உள்ள புதிய வீடுகள் கட்டுவதற்கான 1,508 திட்டங்களுக்கு நிதி வழங்க 25,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இத்திட்டங்களில் 4.58 லட்சம் புதிய வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளன.இந்த நிதியுதவிதொடர்பான சந்தேக விளக்கங்களை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, வீடு வாங்குவோர் தங்கள் வங்கிகளில் இருந்து கூடுதல் கடன் பெற அணுகலாம். அதேநேரத்தில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு இந்த நிதி ஒதுக்கீட்டில் உதவி கோர முடியாது. நிதி பற்றாக்குறையால் கிடப்பில் உள்ள கட்டுமானங்களை மீண்டும் தொடங்குவதற்கு மட்டுமே இந்த நிதி உதவி கிடைக்கும்.