சிதம்பரத்தில் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மகளிர் ஆயம் சார்பில் கோட்டாட்சியரிடம் மனு

சிதம்பரம்: சிதம்பரம் சின்னக்கடைதெரு பகுதியில் திருவள்ளுவர் தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், பள்ளிகள், கோவில்கள், குடியிருப்புகள், பேருந்து நிறுத்தத்தின் அருகே சட்டத்திற்கு முரணாகவும் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி  மகளிர் ஆயம் சார்பில்  சிதம்பரம் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மகளிர் ஆய பொருப்பாளர் இரா.வேம்பரசி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு பெண்கள் அளித்த மனுவை பெற்றுக்கொண்டு  கோட்டாட்சியர்  இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: