சென்னை: கடலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்டு வந்த மோதல் போக்கு, உச்சகட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதன்மூலம் தொழில்துறை அமைச்சர் சம்பத்துக்கு, செக் வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி, ஓ.பி.எஸ் தலைமைக்கு கட்சி நிர்வாகிகள் கட்டுப்பட்டு செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் ஒவ்ெவாரு மாவட்டத்திலும் இருந்து வந்த கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது. இந்தப்பிரச்னையில் கடலூர் அதிமுகவும் தப்பவில்லை. அங்கு கிழக்கு, மேற்கு என 2 மாவட்டங்களாக கட்சி பிரிக்கப்பட்டிருந்தது. கிழக்கு மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளும், மேற்கில் 4 தொகுதிகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத்துக்கு எதிராக, மேற்கு மாவட்ட செயலாளரான முன்னாள் எம்பி.அருண்மொழிதேவன் தலைமையில் பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஓரணியில் திரண்டனர். அமைச்சரின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நிறுத்தினர். இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை அதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் ஆதரவின்றி அமைச்சர் எம்.சி.சம்பத் செயல்பட்டு வந்தார். இந்தவிவகாரம் கட்சியின் தலைமைக்கு சென்றது.
கோஷ்டி மோதல் எதிரொலி கடலூர் அதிமுக 3 மாவட்டமாக பிரிப்பு: தொழில்துறை அமைச்சர் சம்பத்துக்கு ‘செக்’
- மோதல்
- கடலூர்
- மாவட்டம்
- கைத்தொழில் அமைச்சர்
- அதிமுக 3
- மோதல்
- மாவட்டங்களில்
- செக்
- கைத்தொழில் அமைச்சர்
- கடலூர் அதிமுக