ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை பொது இடங்கள், சாைலயோரங்களில் தூக்கி எறிந்தால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் குடிமகன்கள், காலி மதுபாட்டில்களை சாலையோரங்கள், கால்வாய்கள், விவசாய நிலங்கள் போன்றவற்றில் வீசி எறித்து சென்று விடுகின்றனர். குறிப்பாக மசினகுடி, கூடலூர் சுற்று வட்டார பகுதிகள், கெத்தை மலைப்பாதை உள்ளிட்ட வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி சென்று மது அருந்துபவர்கள் காலி பாட்டில்களை வனப்பகுதிக்குள்ளேயே வீசி விடுகின்றனர். மேலும், சில சமயங்களில் பாறைகளில் வீசி உடைத்து விடுகின்றனர். இதனால் யானை, காட்டுமாடு, புலி உள்ளிட்டவைகள் காயமடைந்து இறக்கக்கூடிய சூழலும் உள்ளது.