சென்னை தாம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் சுடப்பட்ட வழக்கில் சரணடைந்த விஜய்க்கு 15 நாள் காவல்: செங்கல்பட்டு நீதிமன்றம்

சென்னை: சென்னை தாம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் சுடப்பட்ட வழக்கில் சரணடைந்த விஜய்க்கு 15 நாள் காவல் விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கியை விளையாட்டாக முகேஷின் நெற்றியில் வைத்து சுட்டபோது வெடித்துவிட்டது என இளைஞர் விசாரணையில் தெரிவித்தார். வண்டலூர் அருகே குப்பைத் தொட்டியில் இருந்து 2 ஆண்டுக்கு முன் துப்பாக்கியை எடுத்ததாகவும் தகவல் தெரிவித்தார். துப்பாக்கியை யாருக்கும் தெரியாமல் முகேஷ் மண்ணில் புதைத்து வைத்திருந்ததாகவும், தீபாவளியையொட்டி துப்பாக்கியை வைத்து விளையாடிய போது முகேஷ் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்ததாகவும் விஜய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories: