வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனை வேலூர் மத்திய சிறையில் தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்தி வருவதாக, பெண்கள் தனிச்சிறையில் உள்ள அவரது மனைவி நளினி கடந்த 26ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று 11வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரிடம் தனிச்சிறை ஜெயிலர் அல்லிராணி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, முருகனை தனிச்சிறையில் இருந்து மீண்டும் பழைய சிறைக்கு மாற்ற வேண்டும். ரத்து செய்த சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.