* காங்கிரஸ் தேசிய ஊடகத் துறை செயலாளர் பேட்டி
கடந்த 6 மாதங்களாக இந்த ஆட்சியின் தவறான கொள்கை காரணமாக பொருளாதார பேரழிவை நோக்கி நம் நாடு சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளும் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. இதை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அறிவுறுத்தலின்படி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று முதல் வரும் 15ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, தமிழக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா, வக்கீல் செல்வம், லட்சுமி ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.