நியூயார்க்: சிலி மற்றும் டோங்கா நாடுகளில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பதற்றமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இல்லபெல் நகரில் இருந்து 28 கிலோ மீட்டர் தென்மேற்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பதற்றமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.