திருவனந்தபுரம்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை உத்தரவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை போல சபரிமலை விவகாரத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர முடியாது என்று கேரள முதல்வர் கூறினார்.கேரள சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, ஜல்லிக்கட்டிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து அந்த தீர்ப்பை முறியடிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோல் சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கேரள சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றி புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.அதற்கு முதல்வர் பினராய் விஜயன் பதிலளித்து கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு எதிரான தீர்ப்பும் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பும் ஒன்றல்ல. சபரிமலை விவகாரம் மக்களின் அடிப்படை உரிமை தொடர்பானதாகும். நமது நட்டில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது.