கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் உபரி நீர் வெளியேறும் தடுப்புச்சுவரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது. கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எட்டு குளங்களில் உக்கடம் பெரிய குளமும் ஒன்று. இந்த குளத்தில் 19.10 அடிக்கு நீரை தேக்கி வைக்க முடியும். பெரிய குளம் 372 ஏக்கர் அளவிற்கு நீர் தேக்க பரப்பு கொண்டது, இதன் மூலமாக 1,425 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த குளம் 14.74 அடி ஆழம் கொண்டது. இதில் 10 அடி ஆழம் வரை மட்டுமே நீர் தேக்க முடியும். அண்மையில் கோவையில் பல்வேறு இடங்களில் பெய்த மழையின் காரணமாக உக்கடம் பெரியகுளம் முழுவதும் நிரம்பியது. இதனை அடுத்து பெரியகுளத்தின் தடுப்பணைகள் மூலம் தண்ணீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.