தக்கோலம் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொசஸ்தலை ஆற்றில் கொட்டுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் தக்கோலம் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொசஸ்தலை ஆற்றில் கொட்டுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தக்கோலம் நகரில் சேரும் குப்பைகளை பேரூராட்சி பணியாளர்கள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். குப்பைகளை கொட்டுவதால் தக்கோலத்தில் கொசஸ்தலை ஆறு இருக்கும் இடம் தெரியாமல் குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது.

Related Stories: