டெல்லியில் எம்பி.க்கள் வசிக்கும் பங்களாக்களுக்கு 3டி பெயர் பலகை

புதுடெல்லி:  டெல்லியில் எம்பி.க்கள் வசிக்கும் பங்களாக்களுக்கு 3டி பெயர் பலகை அமைக்கப்பட உள்ளதாக மத்திய பொதுப்பணித்துறை அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் லூதியான்ஸ் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அரசு குடியிருப்பு பங்களாக்கள் அமைந்துள்ளது. இவற்றின் முன் பகுதியில் ைவக்கப்படும் தங்களின் பெயர் பலகை, பார்வையாக இல்லை என எம்பி.க்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, இந்த பெயர் பலகைகளை மாற்றி விட்டு புதிய பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய பொதுப்பணித் துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் கூறுகையில், “எழுத்துக்கள் தெளிவாக தெரியும் வகையில் பேன்சி பெயர் பலகை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கு அவின்யூவில் இருந்து முதல் கட்ட பணிகள் தொடங்கும். பெயர் பலகை நிறுவுவதில் திறமை வாய்ந்த நிறுவனத்ைத தேர்வு செய்வதற்காக டெண்டர் வழங்கப்படும். இந்த நடவடிக்கைகள் முடிந்தவுடன் பெயர் பலகை அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கும். இரண்டு மாதத்தில் இந்த பணிகள் நிறைவடையும். முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின்படி பெயர் பலகைகள் 3டி.யில் அமைக்கப்படும். எல்இடி விளக்குள் பொருத்தப்படும். ஒரே நிறத்தில் எழுத்துக்கள் எடுப்பானதாக அமைக்கப்படும்,” என்றனர்.

Related Stories: