புதுடெல்லி: டெல்லியில் எம்பி.க்கள் வசிக்கும் பங்களாக்களுக்கு 3டி பெயர் பலகை அமைக்கப்பட உள்ளதாக மத்திய பொதுப்பணித்துறை அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் லூதியான்ஸ் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அரசு குடியிருப்பு பங்களாக்கள் அமைந்துள்ளது. இவற்றின் முன் பகுதியில் ைவக்கப்படும் தங்களின் பெயர் பலகை, பார்வையாக இல்லை என எம்பி.க்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, இந்த பெயர் பலகைகளை மாற்றி விட்டு புதிய பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய பொதுப்பணித் துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் கூறுகையில், “எழுத்துக்கள் தெளிவாக தெரியும் வகையில் பேன்சி பெயர் பலகை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.