உடனடியாக மூடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள்

தேவகோட்டை:தேவகோட்டை நகரில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் குறித்த செய்தி படத்துடன் நேற்று 2ம் தேதி தினகரனில் வெளியானது. இதன் எதிரொலியாக நகரில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் ஆழ்துளைக் கிணறுகள் திறந்து இருக்கிறது என நகராட்சி அலுலர்கள் ஆய்வு செய்தனர். விடுமுறை தினம் என்றும் பாராமல் நகராட்சி ஊழியர்கள் பணி மேற்கொண்டு அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூடினர். நகராட்சியின் நடவடிக்கைக்கு நகர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: